விளம்பரம் இல்லை
மொழி
ஜாதகம்.ai

ஸ்ரீமத் பகவத் கீதை

18 அத்தியாயங்கள் || 701 ஸ்லோகங்கள்

  • பகவத் கீதை என்பது இந்துக்களின் புனித நூல்.
  • இது 'இறைவனின் பாடல்' என்றும் குறிப்பிடப் படுகிறது.
  • 'மகாபாரதம்' என்ற பெரிய இந்திய காவியத்தின் ஒரு பகுதியாகும்.
  • மகாபாரதத்தில் உள்ள பீஷ்மா பர்வம் என்ற அத்தியாயத்தில் 23 - 40 பகுதிகளில் இது காணப்படுகிறது.
  • பகவத் கீதையில் மொத்தம் 701 சுலோகங்கள் உள்ளன.
  • பகவத் கீதை நிகழ்வு, தர்மயுத்தம் தொடங்குவதற்கு சற்று முன்பு குருக்ஷேத்திர போர்க்களத்தில் நடந்தது .
  • இது பாண்டவ இளவரசன் அர்ஜுனனுக்கும் அவனது தேரோட்டி பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் இடையிலான கலந்துரையாடலாகும்.
  • பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலான போரின் தொடக்கத்தில், அர்ஜுனன் இரு தரப்பினரின் படைகளையும் குருக்ஷேத்திரத்தில் பார்த்தான்.
  • இரு தரப்பிலும் அவனது தந்தைகள், தாத்தாக்கள், குருக்கள், தாய் வழி மாமன்கள், சகோதரர்கள், மகன்கள், பேரன்கள், நண்பர்கள், மாமனார், மற்றும் நலம் விரும்பிகள் ஆகியோர் அடங்குவர்.
  • இதைப் பார்த்த அர்ஜுனனுக்கு போரில் ஈடுபட வேண்டுமா இல்லையா என்று குழப்பம் ஏற்பட்டது.
  • அவன் மிகுந்த வருத்தத்துடன் துயரமடைந்தான்.
  • அவனது சிந்தனை என்னவென்றால் , 'கொலை செய்வது தார்மீகமா, அதுவும் ராஜ்ஜியத்தையும் மகிழ்ச்சியையும் பெறுவதற்காக தனது சொந்த உறவினர்களைக் கொல்வதா?'.
  • அவன் இந்த கேள்விகளை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் எழுப்பினான்.
  • மேலும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம், தெய்வீக மற்றும் அசுர செயல்கள் உட்பட இன்னும் பல வாழ்க்கையின் இக்கட்டான நிலைகளை மேற்கோள் காட்டி போரில் ஈடுபட மாட்டேன் என்று கூறி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஆலோசனையைத் நாடினான்.
  • அர்ஜூனனின் கேள்விகள், போர்க்களத்தின் அமைப்பு, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பதில்கள் மற்றும் இவற்றின் வர்ணனை ஆகியவைகள் அடங்கியதே பகவத் கீதை ஆகும்.
01 : அர்ஜுனனின் குழப்பம்
ஸ்லோகங்கள் : 47
02 : அமைதிக்கான வழி
ஸ்லோகங்கள் : 72
03 : செயல்
ஸ்லோகங்கள் : 43
04 : செயல் ஞானம்
ஸ்லோகங்கள் : 42
05 : துறவறம்
ஸ்லோகங்கள் : 29
06 : யோகம்
ஸ்லோகங்கள் : 47
07 : ஞானமும் விஞ்ஞானமும்
ஸ்லோகங்கள் : 30
08 : பரிபூரணத்திற்கான வழி
ஸ்லோகங்கள் : 28
09 : ரகசிய ஞானம்
ஸ்லோகங்கள் : 34
10 : தெய்வீக மேலாதிக்கம்
ஸ்லோகங்கள் : 42
11 : இறைவனின் ரூபம்
ஸ்லோகங்கள் : 55
12 : பக்தி வழி
ஸ்லோகங்கள் : 20
13 : உடலும் ஆத்மாவும்
ஸ்லோகங்கள் : 35
14 : இயற்கையின் குணங்கள்
ஸ்லோகங்கள் : 27
15 : பரமாத்மா
ஸ்லோகங்கள் : 20
16 : தெய்வீகமும் அசுரமும்
ஸ்லோகங்கள் : 24
17 : உள்ளார்ந்த நம்பிக்கை
ஸ்லோகங்கள் : 28
18 : முக்தி அடைதல்
ஸ்லோகங்கள் : 78